Tuesday 7th of May 2024 05:18:41 PM GMT

LANGUAGE - TAMIL
இரவு களியாட்ட விடுதியில் துப்பாக்கிச் சூடு; அமெரிக்காவில் இருவர் பலி!

இரவு களியாட்ட விடுதியில் துப்பாக்கிச் சூடு; அமெரிக்காவில் இருவர் பலி!


அமெரிக்காவின் கரோலினா மாகாணத்தில் உள்ள இரவுநேர மதுபான விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். 9 பேர் படுகாயமடைந்தனர்.

கரோலினா - லன்கஸ்டர் பகுதியில் மதுபான விடுதியில் நேற்று சனிக்கிழமை பெருமளவானவர்கள் கூடியிருந்தபோது திடீரென மர்ம நபர்கள் சிலர் தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கிகளை கொண்டு மதுபான விடுதியில் இருந்தவர்கள் மீது சரமாரியாக சுட்டனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 9 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்கள் மதுபான விடுதியை விட்டு தப்பிச்சென்றனர்.

தகவலறிந்த பொலஸார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


Category: உலகம், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE